அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் சாதனை பயணம்!
சீனாவின் மிகப்பெரும் பணக்காரரான ஜாக் மா, தான் பெரிய பணக்காரர் ஆவதற்காக பல தோல்விகளை சந்தித்தார். அதை எப்படி அவர் சமாளித்து மிகப்பெரிய பணக்காரர் ஆனார் என இக்கட்டுரையில் பார்ப்போம்.
அவன் ஒரு சிறுவன். அவன் உலகில் எதையும் தன்னால் செய்ய முடியும் என்று நம்பினான். ஆனால் அந்த சிறுவன் வளர்ந்து கத்தியின் முனையில் நிற்பது போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொண்டார். அவர் தொடர்ச்சியாக சென்ற இடங்களில் எல்லாம் கதவுகள் மூடப்பட்டன.
கல்லூரியில் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அவர் முயற்சிக்கும்போதும், 30 வெவ்வேறு நிறுவனங்களுக்கு வேலை தேடி அலையும்போதும் அவர் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தார்.
அவருடைய நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்துக்கொண்டே வந்தது. அதனால் அதிருப்தி அடைய மறுத்த அவர் கால போக்கில் அனைத்தும் சரியாகும் என்று உறுதியாக நம்பினார். அதே போல் காலப்போக்கில் அவருக்கு புதிய மாற்றங்கள் நிகழ துவங்கின.
அலிபாபா
அந்த சிறுவன் வேறு யாருமல்ல அலிபாபா
ஆன்லைன் வர்த்தகத்தின் நிறுவனர் ஜாக் மா தான். இந்த சீன முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம் சி.என் 71.46 பில்லியன் மதிப்பில் வருமானத்தை பெற்று வந்தது. ஒரு மாதத்திற்கு மொத்தமே 12 டாலர்களை வருமானமாக சம்பாதித்த ஜாக் மா இப்படி ஒரு பணக்காரராக ஆன கதை இன்னும் சிலருக்கு நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது.
ஒரு நாள் தனது வெற்றி குறித்து அவரே பேசினார். அவர் கூறும்போது “முயற்சியை ஒரு போதும் கை விடாதே, வாழ்க்கை இன்று கடினமாக இருக்கும், நாளை அதைவிட மோசமாக இருக்கும், ஆனால் நாளை மறுநாள் வாழ்க்கை சூரிய ஒளியை போல பிரகாசிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
விதியின் வலிமைக்கு தன்னை பலிக்கொடுக்க மறுத்த ஒரு இளைஞனின் சாதனையாகவே ஜாக் மாவின் வாழ்க்கை பார்க்கப்படுகிறது. ஜாக் மா சமீபத்தில் சீனாவின் பெரிய பணக்காரர் என்றும் ஆசியாவில் உள்ள பில்லியனர்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டார்.
கல்லூரி காலம்
பின்னர் சில நாட்களுக்கு பிறகு நகரத்தின் தலைவரானேன்” என்று கூறினார். வகுப்பில் தேர்ச்சி பெறாமல் கடைசியாக இருப்பது என்பது எந்த ஒரு குழந்தைக்கும் அதன் சுய மரியாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் தங்களை பயனற்றவர்களாக என்ன துவங்கி விடுவர். என ஜாக் மா கூறுகிறார். ஒரு மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனத்தை நடத்தி வந்த போதிலும் ஜாக் மா கணிதம் அதிகம் தெரியாமலே இருந்தார்.
பள்ளியில் பல பாடங்களில் தோல்வியுற்ற அவர் ஒரு மோசமான பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அதில் சேருவதற்கும் நுழைவு தேர்வில் இரண்டு முறை தோல்வியுற்றார்.
முதல் இடம் பெறுபவர்கள் எல்லாம்...
அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு 10
தடவை விண்ணப்பித்தார். அவர்கள் 10 முறையும் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். ஆனால் அவர் அதை பற்றி கவலை படவே இல்லை. சாத்தியமற்ற ஒரு செயலை செய்வதில் ஜாக் மா மிகவும் ஆர்வமாக இருந்தார்.
அமெரிக்காவில் இருந்து வந்த யோசனை
எப்போது எல்லாம் நான் விரக்தி அடைகிறேனோ அப்போது எல்லாம் நான் அந்த படத்தை பார்ப்பேன். நான் மீண்டும் நியூயார்க்குக்கு வருவதற்கு முன்பும் அந்த படத்தை பார்த்தேன். என்னிடம் என்ன மாறுபாடு ஏற்பட்டாலும் நான் அந்த படத்தை பார்ப்பேன்” என்கிறார் ஜாக் மா.
மற்ற முதுகலை பட்டத்தாரிகளை போலவே ஜாக் மாவும் வேலைக்காக மற்றவர்களிடையே போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டது. புகழ்பெற்ற கல்லூரியாக இருந்தாலும் குறைந்த சதவீதத்தில் அவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.இதனால் வேலை தேடுவதற்கு அவரது பட்டம் பெரிய துணையாக இல்லை.
இதனால் அவர் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார். அனைத்தில் இருந்தும் நிராகரிக்கப்பட்டார். ப்ளும்பர்க் பத்திரிக்கையுடனான நேர்காணலில் அவர் 24 பேர் கே.எஃப்.சி நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் அதில் அவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
காவல் துறை வேலை முயற்சி...
ஆனால் ஜாக் மாவுக்கு சவால் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்தது. முடியாத ஒன்றை செய்வதில் அவர் எப்போதும் அதிக விருப்பம் காட்டி வந்தார். பிறகு அவர் தேர்ச்சி பெற்ற கல்லூரியிலேயே அவருக்கு ஆங்கில ஆசிரியராக சிறிய வேலை கிடைத்தது.
கடினமான காலகட்டம்
ஆனால் எதிர்க்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்று அவருக்கு எந்த யோசனையும் இருக்கவில்லை. “அலிபாபா துவங்குவதற்கு முன்பு எனக்கு வாழ்வதே கடினமான காரியமாக இருந்தது. நான் மூன்று வருடங்களாக வருவாய் எதுவுமே இல்லாமல் இருந்தேன்.
எனக்கு நன்கு நினைவிருக்கிறது. நான் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பில் பணத்தை கொடுக்க வரும்போது அது ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது என அந்த உணவக முதலாளி கூறுவார்.
அலிபாபாவை பொறுத்தவரை நான் உங்கள் வாடிக்கையாளர். அதில் நான் நிறைய பணம் சம்பாதித்தேன். 1999 இல் துவங்கப்பட்ட அலிபாபா வந்த உடனே வெற்றி பெற்றுவிடவில்லை. பாரம்பரிய கடை வைத்து நடத்தும் வணிகர்களை இ-காமர்ஸ் இணையத்தளங்கள் பாதிக்கும் என்பதால் சீனா இ-காமர்ஸ் தொழில்துறைக்கு ஆதரவு அளிக்கவில்லை.” என்று அவர் கூறுகிறார்.
போராட்டம்
பிறகு மா தனது மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து கொஞ்சம் விளம்பரங்களை செய்தார். அவர் நிர்வாக பதவிக்கு புதிய ஆட்களை வேலைக்கு சேர்த்தார். ஆனால் மா செய்ததில் அது தவறான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தில் உற்பத்தியை குறைத்தது. இதனால் அவரோடு இருந்த சில சிறந்த மனிதர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அலிபாபாவின் வெற்றி
இப்போது உயர்ந்து நிற்கும் இ-காமர்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவராக ஜாக் மா கூறும்போது “உங்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் பொறுமை. அது இல்லாமல் உங்களால் எதுவுமே செய்ய முடியாது”.
